கிளிநொச்சியில் பண்டிகை நாளில் நடந்த சம்பவம் - சோதனை சிக்கிய இளைஞர்..!
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பண்டிகை நாளை முன்னிட்டு ஏற்கனவே கொள்வனவு செய்து வைத்து விற்பனை செய்த மதுபான போத்தல்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை நேற்று(28.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 மதுபான போத்தல்கள் பறிமுதல்
பண்டிகை தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் அனைத்தும் நேற்றைய தினம் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, ஏற்கனவே மதுபான போத்தல்களை கொள்வனவு செய்து, அப்பகுதி மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 30 அரச மதுபான போத்தல்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், மதுபான போத்தல்களும் எதிர்வரும் 03ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு விடுதியில் இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் : பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட பொலிஸார்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam