கொழும்பில் சட்டவிரோத ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
கொழும்பு, கடுவெல - வெலிவிட்ட பகுதியில் சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான தோட்டாக்களுடன் நபர் ஒருவரைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம்(13.3.2026) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது
ஒரு கைத்துப்பாக்கி, ஒரு ரைபிள் துப்பாக்கி, 15 கைத்துப்பாக்கி தோட்டாக்கள், 2 ரைபிள் தோட்டாக்கள், ஒரு மகசின், 50 நேரடித் தோட்டாக்கள் (7.62 மில்லிமீற்றர் ரகத்தைச் சேர்ந்தவை) என்பவையே கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri