கொழும்பில் பலகோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 3 கிலோகிராமுக்கும் அதிகமாக ஜஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப் பொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 3 கிலோகிராம் 944 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 215 கிராம் ஹெராயின் மற்றும் ரூ. 6,50,000 ரொக்கப் பணமும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam