கொழும்பில் பலகோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 3 கிலோகிராமுக்கும் அதிகமாக ஜஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப் பொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 3 கிலோகிராம் 944 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 215 கிராம் ஹெராயின் மற்றும் ரூ. 6,50,000 ரொக்கப் பணமும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri