பெண்னொருவர் தீயில் எரிந்த சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் கடந்த 1ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளாகிய பெண் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது கணவரை மல்லாவி பொலிஸார் அனிச்சங்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில்,சந்தேகநபரை மல்லாவி பொலிஸார் நேற்று (06) முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே சந்தேகநபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.