கிளிநொச்சியில் அதிரடி நடவடிக்கை : இஷாராவிற்கு வீடு வழங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(19.10.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி குறித்த கொலைக்கு பின்னர் இலங்கையில் பதுங்கியிருந்த இடங்களில் பொலிசார் விசேட சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் தடுப்பு காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி நேற்று கிளிநொச்சி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில், கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கியகுற்றச்சாட்டில் நேற்று ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




