வவுனியாவில் விஷேட அதிரடி படையினரால் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை வவுனியா ,மடுகந்த விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.
கெப்பிற்றிக்கொல்லாவை காட்டுப்பகுதியில் மரங்கள் கடத்தப்படுவதாக விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மடுகந்த விஷேட அதிரடிபடையினரின் பொறுப்பதிகாரி ஆர்.எம்.வி. நிமால் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினரால் குறித்த பகுதியை சுற்றிவளைத்த போது கெப்பிற்றிக்கொலாவ பகுதியை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதுடன், மரத்தினை வெட்டுவதற்கு பயன்படும் இயந்திரத்தினையும் கைப்பற்றினர்.
இதேவேளை, அறுக்கப்பட்டு கடத்திச்செல்லப்படவிருந்த மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களையும், மரக்குற்றிகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளிற்காக கெப்பிற்றிக்கொல்லாவை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.











10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
