”ஒமிக்ரோன்” மாறுபாட்டில் உயிரிழப்பா? வீரியம் இனிதான் தெரியவரும்
”ஒமிக்ரோன்” கோவிட் தொற்றின் பாதிப்பு, ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது.
எனினும் இனி வரும் காலங்களில் இதன் வீரியம் பற்றி தெரிய வரும் என்று தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோனின் அறிகுறிகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும்.
அது உடல்வலி மற்றும் வலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். எனினும் வாசனையின்மை, சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை என்று ஏஞ்சலிக் கோட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும் அதனையும் தொடர் ஆராய்ச்சி மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்பதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆராச்சியாளர்கள் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 6 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan