ஓமானில் ஆபத்திலுள்ள பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கு நாடுகளில் வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களை ஓமானில் விற்பனை செய்யும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அதனுடன் தொடர்புபட்ட இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 77 இலங்கைப் பெண்களில் பதிவு செய்யப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
இவர்களில் 12 பேர் மாத்திரமே தம்மிடம் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.