ஜேர்மனியில் மூடப்பட்ட பழமையான மசூதி : ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜேர்மனியின் மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மசூதியானது Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.
இந்த மசூதி ஷியா முஸ்லிம் அமைப்பால் நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரான் அரசுடன் அதற்கு ஆழமான தொடர்பு இருப்பதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய புரட்சி
மேலும், இந்த அமைப்பு ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பதாகவும், ஈரானில் இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஜேர்மனி ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து 2020இல் தடை செய்ததுள்ளது.

சர்வதேச ஊடகமொன்றின் அறிக்கையின்படி, ஜேர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 54 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.
மசூதி தவிர, மக்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான மிகப் பாரிய நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து ஈரான் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளதோடு, மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம் News Lankasri
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri