தடுப்பூசி வழங்க லஞ்சம் கோரிய அதிகாரிகள்
கொழும்பு நகரத்தில் வாழும் பொதுமக்களுக்கு, கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்க கொழும்பு மாநகர ஊழியர்கள் சிலர், பணம் கோரியமை தொடர்பில் உள்ளக ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளக விசாரணையை விரைவுபடுத்துமாறு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குற்றப்புலனாய்வு துறையிடம் முறையிடப்போவதாக சில உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க ஊழியர்களில் இருவர் 5000 ரூபா முதலான தொகையை கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க ஏற்கனவே மாநகர ஆணையாளர், ரோஷினி டயஸுக்கு இது குறித்து விசாரணை நடத்துமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே அறிவுறுத்தியிருந்தார்.

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
