தடுப்பூசி வழங்க லஞ்சம் கோரிய அதிகாரிகள்
கொழும்பு நகரத்தில் வாழும் பொதுமக்களுக்கு, கோவிட் 19 தடுப்பூசிகளை வழங்க கொழும்பு மாநகர ஊழியர்கள் சிலர், பணம் கோரியமை தொடர்பில் உள்ளக ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளக விசாரணையை விரைவுபடுத்துமாறு மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கோரிக்கை விடுத்தனர்.
பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், குற்றப்புலனாய்வு துறையிடம் முறையிடப்போவதாக சில உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர்.
கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்க ஊழியர்களில் இருவர் 5000 ரூபா முதலான தொகையை கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க ஏற்கனவே மாநகர ஆணையாளர், ரோஷினி டயஸுக்கு இது குறித்து விசாரணை நடத்துமாறு கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே அறிவுறுத்தியிருந்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
