யாழ்.தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்றைய தினம்(08.06.2023) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு பதிவு
முகநூலில் படமொன்றை பதிவிட்டதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு தன்னை அழைத்து எச்சரித்துடன் அச்சுறுத்தும் வகையில் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செயற்பட்டதாக முறைப்பாட்டாளர் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |