கனேடிய அரசாங்கத்தின் செயற்பாட்டை எதிர்த்து மட்டக்களப்பில் நிர்வாக முடக்கம்
கனேடிய அரசாங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நிர்வாக முடக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிர்வாக முடக்க நடவடிக்கையானது இன்றைய தினம் (23.06.2023) ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கனேடிய அரசாங்கதின் செயற்பாடுகள் தொடர்பான துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டிருந்தன.
கவனயீர்ப்பு போராட்டம்
குறித்த நிர்வாக முடக்க நடவடிக்கையானது இன்று காலை 6.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை அரை நாள் நிர்வாக முடக்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேசத்தின் பெருமளவான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் பிரதான இடங்களில் கறுப்பு கொடிகள் மற்றும் கனேடிய அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் எழுதிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் இது தொடர்பில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலும் இது தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ககேனடிய பிரதமரால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் மீது இனப்படு கொலை நடைபெற்றதாகவும் அது குறித்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பொறுப்புக் கூறல் நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பாக கனடா தொடர்ந்தும் செயற்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 16 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
