கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இதனை தெரிவித்துள்ளார்.
320 பாடசாலைகள் தெரிவு
அதன்படி குறித்த இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்றிய மாணவர்களின் நலன்கருதி அடுத்த வருடத்திலிருந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கமைய தொழிற்பயிற்சி, தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆறு மாத கால பயிற்சி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக 320 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |