235 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து - ஒருவர் படுகாயம்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா, கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டியொன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235 அடி பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (02) திங்கட்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் கூறுகையில்,
நுவரெலியா - கந்தப்பளை பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 235 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது என தெரிவித்தனர் .
மேலும் குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.



சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 28 நிமிடங்கள் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam