நுவரெலியாவில் காணாமல்போயிருந்த இளைஞர் கண்டுபிடிப்பு
நுவரெலியா , பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் காணாமல்போயிருந்த நிலையில் பண்டாரவளை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நுவரெலியா , பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரை காணவில்லை என அவரது உறவினர்களால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா , பீட்ரூ தோட்டத்தை சேர்ந்த லீலாரத்ன கயான் Gayan (வயது 30) என்பவர் கடந்த (09.12.2025) ஆம் திகதி முதல் காணாமல்போனதாக முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நுவரெலியாவிலிருந்து இருந்து வெளிமடை பகுதிக்கு தொழில் நிமித்தமாக சென்ற நிலையில், அன்றிலிருந்து இன்று வரை அவர் தொடர்பான எந்தவிதமான தகவலும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை என்றும், கைபேசியும் செயலிழந்த நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் காணாமல்போன இளைஞனை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை இளைஞன் தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமது மகனை கண்டுபிடிக்க ஊடகங்களை நாடுவதாக அவரது தந்தை மற்றும் தாய் தெரிவித்துள்ளனர்.
எனவே குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 075 376 2151 , 077 342 1466 என்கிற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam