தாதிய உத்தியோகத்தர்களின் இடமாற்றத்தினை தற்காலிகமாக நிறுத்துமாறு ஆளுநர் பணிபுரை
வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதியர்களின் இடமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரனுக்குப் பணிபுரை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட மாகாணத்தில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்காக வட மாகாண சுகாதார பணிப்பாளர் நடவடிக்கை எடுத்த நிலையில், குறித்த விடையம் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக சுகாதார உத்தியோகத்தர்களின் சேவை அத்தியாவசிய சேவையாக கருதப்படும் நிலையில், குறித்த இடமாற்றத்தை நிறுத்துமாறு வடமாகாண தாதிய சங்கம் ஆளுநரை கோரியதன் அடிப்படையில் இடமாற்றம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam