14 மாவட்டங்களில் டெங்கு நோயின் வீரியம் அதிகரிப்பு..! 50 ஆயிரத்தை தாண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை
டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று(26.06.2026) டெங்கு நோயால் 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், வேகமாகப் பரவிவரும் டெங்கு நோய், பல மருத்துவமனைகளின் நோயாளி கொள்ளளவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தற்போது இலங்கையில் உள்ள 14 மாவட்டங்களைப் பாதகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியில், டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ள தீவின் 600 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 3 நாட்கள் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை இன்று (26) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தற்போதுள்ள டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான போசன் தானசிற்கு ஒப்புதல் அளிக்கும்போது நிபந்தனைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகின்றது.