நுகேகொட மாபெரும் பேரணி - படையெடுக்கும் முக்கிய அரசியல்வாதிகள்
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பேரணி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் குறித்த பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
டிரான் அலஸ், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, லசந்த அழகியவன்ன, வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, ராஜித சேனாரத்ன, பிரசன்ன ரணதுங்க மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலர் உட்பட முக்கிய அரசியல்வாதிகள் பலர் ஏற்கனவே அரங்கில் கூடியுள்ளனர்.

போக்குவரத்தில் பாதிப்பு
இந்தப் பேரணி இன்று (21) பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பேரணிக்காக பொதுமக்கள் அதிக அளவில் கூடத் தொடங்கியுள்ளதுடன், மேலும் நுகேகொடை நகரத்தில் போக்குவரத்தில் சிறிது பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவாதத்தில், முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச ரணில் விக்ரமசிங்கே, மைத்திரிபால சிறிசேன, சர்வஜன பலய, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், சுமந்திரன், திகம்பரன், மனோ கணேசன் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்க மாட்டார்கள் என்று உதய கம்மன்பில கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.







