பெலாரசில் குவிக்கப்படும் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள்! பெரும் அச்சத்தில் ஐரோப்பிய நாடுகள்
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பெலாரஸ் நாட்டுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் உக்ரைனின் படைகள் பெரியளவில் போரில் ஈடுபட தொடங்கியுள்ளன.
இதனை தொடர்ந்து உக்ரைனின் எல்லையையொட்டிய பெலாரஸ் நாட்டில் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களை அந்நாட்டுக்கு ரஷ்யா அனுப்பிவைத்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து பெற்ற ஏவுகணைகளையும் மற்றும் வெடிகுண்டுகளையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இந்த வெடிகுண்டுகள், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை விட 3 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |