தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயம்: அருண் ஹேமச் சந்திர
தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையே ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயம் எனவும் தனித் தனியான வேட்பாளர் இன்றி தேசிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள் எனவும் தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை(Trincomalee) மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திர தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பிரசார நடவடிக்கையுடனான ஊர்வலம் இன்று (09) கிண்ணியாவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஊழல் மோசடி
அவர் மேலும் கூறுகையில்,
“ஊழல் மோசடியில் ஈடுபட்ட ராஜபக்ச கும்பல்களை ஜனாதிபதி பாதுகாத்து வருகிறார்.
அவர், ஆயிரம் கூட்டணிகளை உருவாக்கினாலும் கூட மக்கள் திசை காட்டியுடன் ஒன்று சேர்ந்துள்ளனர்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |