ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்த கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜூன் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றிற்கு தெரிவாகிய ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் ஒழுங்கமைப்புத் துறையின் துணை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.
இந்த பதவி விலகல் நாடாளுமன்ற செயலாளர் குஷாணி ரோஹணதீரவால் ஏற்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது இடத்திற்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹர்ஷண சூரியப்பெரும இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இம்மாத இறுதியில் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
