ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்
ஆளும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும பதவி விலகியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்த கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, தனது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஜூன் 20ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றிற்கு தெரிவாகிய ஹர்ஷண சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் ஒழுங்கமைப்புத் துறையின் துணை அமைச்சராக கடமையாற்றியுள்ளார்.

இந்த பதவி விலகல் நாடாளுமன்ற செயலாளர் குஷாணி ரோஹணதீரவால் ஏற்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது இடத்திற்கு வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹர்ஷண சூரியப்பெரும இலங்கை நிதியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போதைய நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இம்மாத இறுதியில் பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam