அம்பாறையில் தேசிய மக்கள் சக்தியின் துண்டுப் பிரசுர விநியோகம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் (NPP) துண்டுப் பிரசுரம் ஊடாக அம்பாறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டிருந்தது.
இதற்கமைய கடந்த 22 ஆந் திகதி வியாழக்கிழமை முதல் கொண்டு இன்று (26) வரை ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது நிந்தவூர் மருதமுனை நற்பிட்டிமுனை மாளிகைக்காடு பெரிய நீலாவணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தமது பிரசாரங்களை முன்னெடுத்துள்ளனர்.
கட்சி செயற்பாட்டாளர்கள்
மேலும்“நாடு அநுராவோடு. அவரின் வெற்றியில் நாமும் பங்காளியாக இருப்போம். வாரீர் மாற்றத்தை நோக்கி பயணிப்போம் வளமான நாடு அழகான வாழ்க்கை” என பிரச்சார துண்டுப்பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கட்சி செயற்பாட்டாளர்கள் விநியோகித்து வருகின்றனர்.
அனுரவின்
வெற்றியை இந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் ஊடாக உறுதிப்படுத்த இவ்வாறான
செயற்பாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ உட்பட
கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா மற்றும் தேசிய மக்கள் சக்தியின்
செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam