இலங்கையில் பாசிசவாதம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது
இலங்கையில் பாசிசவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் அடோல்ப் ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் நிலவியது போல் இன்று இலங்கையில் பாசிசவாத ஆட்சி இடம்பெறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை பொலிஸார் ஜெர்மனியின் ஹிட்லரது ஆட்சிக்காலத்தில் இயங்கிய பொலிஸாரை போன்று செயல்படுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குறிப்பாக பாசிசவாதத்திற்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்பொழுது பாசிசவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது எனவும் குறிப்பாக நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மூன்று தடவைகள் வன்முறை வழியை பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி அந்த கொள்கைகளை தொடர்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்பாராத விதமாக எதிர்பாராத நேரத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு இந்த ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றது என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமாரவின் உடலில் மறைந்திருந்த ஹிட்லர் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தலைகாட்டத் தொடங்கியுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.