பாலர் பாடசாலை பிள்ளைகளாலும் இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும்
பலர் பாடசாலை பிள்ளைகளால் கூட இவ்வாறு திறைசேரியை நிரப்ப முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
மக்கள் மீது அதீத வரி சுமையை திணித்து அரசாங்கம் வருமானம் ஈட்ட முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு மிக மிஞ்சிய அளவில் வரிகளை அறவீடு செய்து திறைசேரியை நிரப்புவதற்கு பாலர் பாடசாலை பிள்ளைகளுக்கும் முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் மக்களின் மீது வரிச் சுமையை திணிக்கின்றது இந்த அரசாங்கம் மக்களின் மீது வரி அழுத்தத்தை பிரயோகிக்கிறது என்று சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் பரிந்துரை செய்யப்பட்டதை விடவும் அதிக அளவில் இந்த அரசாங்கம் மக்கள் மீது வரிச் சுமையை திணித்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேவையற்ற வகையில் வரிகளை விதித்து அரசாங்க திறைசேரியை நிரப்புவது ஒரு பெரிய விடயம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் வரி செலுத்துவோரிடமிருந்து 287 பில்லியன் ரூபாவை சூறையாடியுள்ளது என சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan