அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து மகிழ்ச்சி வெளியிடும் ரவி கருணாநாயக்க
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் தாங்கள் ஆரம்பித்த பாதையில் பயணிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறு தங்களது பாதையில் பயணத்தை தொடர்வது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் எதையும் செய்யவில்லை எங்களது திட்டங்களையே தொடர்ந்தும் முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் பத்து பதினைந்து விடயங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தாலும் இந்த அரசாங்கம் ஒன்று இரண்டு விடயங்களை மட்டுமே முன்னெடுக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்த விடயம் தொடர்பில் நான் எனது கரிசனையை வெளியிடுகின்றேன் என ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri