பொய்யர்களின் கூடாரமே இந்த அரசாங்கம்! சஜித் பிரேமதாச
ஆகப் பெரும் பொய்யர்களின் கூடாரமே இந்த அரசாங்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இன்று (27) ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்துமே பொய் வாக்குறுதிகளாகும். அவற்றில் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
பொய் வாக்குறுதி
இனி வரும் காலங்களில் நிறைவேற்றப் போவதும் இல்லை. பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்குவதாக கூறினார்கள். பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறினார்கள். இப்படியாக ஏராளம் வாக்குறுதிகளை அள்ளிவீசியே அதிகாரத்துக்கு வந்தார்கள்.
ஆனால் அவற்றில் எதையும் நிறைவேற்றும் எண்ணம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை.
இந்த அரசாங்கம், ஆகப் பெரும் பொய்யர்களின் கூடாரம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
