பரீட்சைகள் இடம்பெறும் திகதி தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
பரீட்சைகள் நடத்தப்படும் திகதி அறிவிப்பு
இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்தப்படும்.
அதேவேளை, இவ்வருடத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.