ரஷ்ய அட்டை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
எம்.ஐ.ஆர் என்ற ரஷ்ய அட்டையை செலுத்தும் முறையை ஏற்றுக்கொள்ளாது என்ற செய்திகளை இலங்கை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட MIR கொடுப்பனவு முறை மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, தற்போதைய நிலையில், சாதகமாக பரிசீலிக்கும் நிலையில் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பந்துல குணவர்தன விடுத்துள்ள கோரிக்கை
அண்மையில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்திருந்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, ரஷ்ய பணம் செலுத்தும் முறையை அங்கீகரிக்குமாறு மத்திய வங்கியிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் உலகெங்கிலும் உள்ள பல வங்கிகள் அமெரிக்கத் தடைகளைத் தவிர்க்க MIR அட்டை திட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன.
இந்தநிலையில் MIR என்பது மேற்கத்திய நிதி அமைப்பிலிருந்து சுயாதீனமாக
செயல்படும் ஒரு கட்டணத் திட்டமாகும், இது SWIFT இன்டர்பேங்க் கொடுப்பனவு
முறைக்கு வெளியே ரஷ்ய வங்கிகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள நாடுகளை
அனுமதிக்கிறது.
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri