பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு
பேருந்து சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாகப் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோரிக்கையைப் பரிசீலித்த நிலையில் நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டண அதிகரிப்பை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண திருத்தங்கள் நாளை (14) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தினால் பேருந்து தொழிற்சங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் மானியம் அல்லது பேருந்து கட்டண அதிகரிப்பைப் பேருந்து தொழிற்சங்கங்கள் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது .




