தனியார் வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் நோய்த் தொற்று பரம்பல் காரணமாக தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி மேல் மாகாணத்தில் தரம் 11 இற்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam