கறுப்பு பூஞ்சை பரவல் - சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவாதென சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் இந்த பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இலங்கையில் மிக குறைவாக எண்ணிக்கையிலானோரே உள்ளனர்.
கொழும்பு, குருணாகல், இரத்தினபுரி பிரதேசங்களில் கொவிட் தொற்றுக்குள்ளான சிலர இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நோய் தோல், மூக்கு, மூளை, கண்கள், நுரையீரல் மற்றும் உடலின் உட்புற உறுப்புகளின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம். ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் இடத்தை வைத்தே அறிகுறிகள் தீர்மானிக்கப்படும் என் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோயின் ஆரம்பம் நச்சு அடங்கிய பூஞ்சையாகும். அது சூழலில் இருப்பதாகவும் தொற்ற நோயாக பரவாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam