கறுப்பு பூஞ்சை பரவல் - சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
கறுப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு பரவாதென சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் இந்த பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இலங்கையில் மிக குறைவாக எண்ணிக்கையிலானோரே உள்ளனர்.
கொழும்பு, குருணாகல், இரத்தினபுரி பிரதேசங்களில் கொவிட் தொற்றுக்குள்ளான சிலர இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நோய் தோல், மூக்கு, மூளை, கண்கள், நுரையீரல் மற்றும் உடலின் உட்புற உறுப்புகளின் எந்தப் பகுதியையும் பாதிக்கலாம். ஒருவருக்கு இந்த நோய் ஏற்படும் இடத்தை வைத்தே அறிகுறிகள் தீர்மானிக்கப்படும் என் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோயின் ஆரம்பம் நச்சு அடங்கிய பூஞ்சையாகும். அது சூழலில் இருப்பதாகவும் தொற்ற நோயாக பரவாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
