யாழ்.விமான நிலையம்! பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் விமான பயணிகளுக்கு முக்கியமான அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய தொலைபேசி இலக்கங்கள்
அதற்கமைய, 021 221 9373 என்ற இலக்கத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும்.
இதேவேளை, 077 465 3915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |