புதிய அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்கப் போவதில்லை: ஹர்ஷ டி சில்வா திட்டவட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, தான் புதிய அரசாங்கத்தினால் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் செய்திகளை மறுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு முனைந்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்திக்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, இந்த வதந்தியில் தம்மைப் பற்றிய குறிப்பை 100% மறுப்பதாக தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பதிவொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1/2: I deny 100% reference to me in this @TimesOnlineLK rumour. I have NOT had any discussions w any member of Government on the speculated position. I have continuously argued for an interim all (or multi) party Gov to rescue #SriLanka from this crisis @GotabayaR put us in to. pic.twitter.com/gA7Z8FbHDB
— Harsha de Silva (@HarshadeSilvaMP) July 27, 2022
மிகக் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்
ஊகிக்கப்படும் நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கத்தின் எந்தவொரு உறுப்பினருடனும் தாம் கலந்துரையாடவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்காக சர்வ கட்சி அரசாங்கத்திற்காக நான் தொடர்ந்து வாதிட்டேன்," என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குத் தேவையான மிகக் கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்துக் கட்சி அல்லது பல கட்சிகளைக் கொண்ட அரசாங்கம் இன்றியமையாதது என்பது தனது கருத்தாகும் எனவும் வலியுத்தியுள்ளார்.
அதற்கு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் 9-12 மாதங்களுக்கு அரசியலை இடைநிறுத்தி, நாங்கள் தயாரித்த குறைந்தபட்ச பொதுத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்,” என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் வெடித்தது மற்றுமொரு போராட்டம்! கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள் |