நாட்டு மக்களின் மகிழ்ச்சி நீடிக்காது! சபையில் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதாக அமைந்து விடக்கூடும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளைப் பெற்ற பல நாடுகள் உள்ளன. அவை இரண்டு, மூன்று தடவைகள் வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
மூன்று தடவைகள் வீழ்ச்சி
ஆர்ஜெடினா, கிரீஸ், லெபனான் போன்ற நாடுகளை அதில் உள்ளடக்கலாம்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றி நிதி முகாமைத்துவத்தை முறையாக முன்னெடுத்த பல்வேறு நாடுகள் முன்னேற்றமடைந்துள்ளன.
இந்நிலையில் எமக்கான சில நிபந்தனைகள் கட்டாயமானது. எனவே நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், இந்த மகிழ்ச்சி தற்காலிகமானதாக அமைந்து விடக்கூடும்”என தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri