க.பொ.த உயர்தர பரீட்சையில் சாதனை புரிந்த வடக்கு மாணவர்கள் கௌரவிப்பு
வெளியான க.பொ.த உயர்தர பரீட்சையில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வானது இன்றையதினம்(01) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, ஆறு துறைகளில் சாதித்த மாணவர்களும் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கௌரவிப்பு நிகழ்வானது தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தின் ஏற்பாட்டில் அவர்களது அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம விருந்தினராக ப.விக்கினேஷ்வரனும் (முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர்), ஏனைய விருந்தினர்களாக பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் (பீடாதிபதி - விஞ்ஞானத்துறை - யாழ்ப்பாண பல்கலைக்கழகம், போசகர் - தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்) நாமகள் கிருஷ்ணபிள்ளை (தலைவர் - தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் - யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ள இலங்கை யுவதி விவகாரம்: பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



