புத்தாண்டினை கரிநாளாக கொண்டாடுகின்றோம் - வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் கவலை!
இன்றைய தினம் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினைக் கூட நாங்கள் வீட்டில் இருந்து உறவுகளோடு கொண்டாட முடியாமல் எமது பிள்ளைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாளை நாங்கள் கரி நாளாகத் தான் கொண்டாடுகின்றோம் என வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
இன்று 45வது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். எங்களுக்கான பதில் வந்தும் கூட எங்களை வேலைக்கு அனுப்புகிறார்கள் இல்லை.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது நிலையைக் கருத்தில் கொள்கின்றார்கள் இல்லை.
மழை, பனி, வெயில் என அனைத்திலும் நாங்கள் அகப்பட்டு சிறுவர்களோடும் கர்ப்பவதிகளோடும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றோம்.
எந்தவொரு அதிகாரிகளும் இரக்கமே இல்லாமல் செயற்படுகின்றார்கள் எனத் தெரிவித்து
கண்ணீர் சிந்தினர்.




