வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக்கூட்டம்
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டமானது, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இக் கூட்டமானது, இன்று (03.08.2024) காலை 11:30 மணியளவில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆரயப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலாளர்கள் நலன்சார்ந்த பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
இந்நிகழ்வில், மங்கள சுடர்களை தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம், யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன், உட்பட பலரும் ஏற்றி வைத்துள்ளனர்.
மேலும், இதில் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தை பிரதிநித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் கமார, அதன் பிரதிநிதி மற்றும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |