வடமாகாணத்தில் இருந்து கொமன்வெல்த் போட்டிக்குச் செல்லும் முதல் தமிழ் இளைஞன்
வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வீரர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய குறித்த இளைஞரே இவ்வாறு கூடைப் பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பல போட்டிகளுக்கு தலைமைத்துவம்
சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணியின் பிரதித் தலைவராகவும் இந்த இளைஞர் செயற்பட்டுள்ளார்.
அதன் பிறகு நடத்தப்பட்ட போட்டிகளில் தலைமைத்துவம் ஏற்றுள்ளார்.
கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தற்போதுதான் முதன்முறை போட்டியிடுவதாகவும், அதில் கலந்து கொள்ளும் முதலாவது தமிழ் இளைஞன் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து வருடமாக யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருவதுடன், மட்டக்களப்பில் நடத்தப்பட்ட தேசிய போட்டிகளில் வெற்றியையும் தனதாக்கி கொண்டுள்ளார்.




