கனடாவில் இடம்பெற்ற கொடூர கத்திக்குத்து தாக்குதல் - தமிழர் ஒருவர் பலியானதாக தகவல்
கனடாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், உயிரிழந்த நபர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிடவில்லை.
மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு டொராண்டோவில் கடந்த செவ்வாய்கிழமை இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 22 வயது இளைஞன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் செவ்வாய்கிழமை இரவு 10:18 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலேயே இறந்த நபர்
இதில் 24 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், 25 வயதான நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ்கேஸில், ஒன்ட் நகரைச் சேர்ந்த 24 வயது இளைஞன். சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது மரணம் இந்த வருடத்தில் டொராண்டோவில் நடந்த 49வது கொலையாகும். அவரது அடையாளத்தை பொலிஸார் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் டொராண்டோவைச் சேர்ந்த 22 வயதான ஹாரூன் இம்ரான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam