அமெரிக்கா - தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி!
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு எதிராகப் பாரிய அளவிலான நடவடிக்கையை எடுக்கத் தயாராக இருப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong-un) சகோதரி கிம் யோ ஜாங் (Kim Yo Jong) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரியப் படைகள் கடந்த சில நாட்களாகக் கொரியத் தீபகற்பத்தில் இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப் பெரிய அளவிலான இராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி வருகின்ற நிலையில், கிம்மின் சகோதரி அமெரிக்கா, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எச்சரிக்கை
இதுகுறித்து கிம் யோ ஜாங் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, “அமெரிக்கப் படைகள் மற்றும் கைப்பாவை தென் கொரிய இராணுவத்தின் அமைதியற்ற இராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பாரிய அளவிலான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு “நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது” என்று ஜோப்பைடன் அரசுக்குக் கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யார் இந்தக் கிம் யோ ஜாங்...!
வடகொரிய ஜனாதிபதி கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார்.
அத்துடன், ஜனாதிபதி கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங், அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும், முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.
கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
