வடக்கு - கிழக்கில் வாக்களிப்பதில் திணறும் மக்கள்! எச்சரிக்கும் முக்கியஸ்தர்
தமிழ்த்தேசிய தளத்தில் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் அதிகளவில் போட்டியிடுவதினால் மக்கள் யாருக்கு வாக்களிப்பதென்பதில் குழம்பிபோயுள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சன் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இனவாதத்தினால் கட்டவிழ்க்கப்பட்ட இலங்கையின் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வென்பது எப்போதும் கிடைக்காது என்பது கடந்த காலங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
16 ஆவது இந்த நாடாளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதியாக யார் சென்றாலும் எதுவும் நடக்காது என்பது அனைவரும் அறிந்தது என்றும் கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam