வடக்கு - கிழக்கு ஆளுநர் மாற்றங்கள் தொடர்பில் வெளிவரும் இரகசிய தகவல்கள்(Video)
ஆளுநர்கள், ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள், ஒரே இரவில் ஜனாதிபதி நினைத்த அடுத்த நொடியில் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஆளுநர்களின் பதவி நீக்கத்தை இலங்கையின் 13 ஆவது திருத்த சட்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள் இணைந்து, தாங்கள் பதவி விலக போவதில்லை என்று முடிவெடுத்து ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இருப்பினும் அவர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதிலிருந்தே தெரிகின்றது முழு அதிகாரமும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் உள்ளது.
ஆளுநர்கள் நியமிக்கபட்டால் அவர்கள் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ஒரே இரவில் ஜனாதிபதி நினைத்த அடுத்த நொடியில் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
