வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் இடம்பெற்ற கிளித்தட்டு போட்டி
வணங்காமண் மறுவாழ்வு கழகத்தால் நாடாத்தப்படுகின்ற வணங்காமண் வெற்றிகிண்ண கிளித்தட்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டியானது நேற்றையதினம்(06.06.2025) அதன் ஸ்தாபகரும், தலைவருமான தர்மலிங்கம் ஜீவரத்தினம் (ஜீவா) தலைமையில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அழிவு நிலையில் உள்ள தமிழர்களது பாராம்பரிய விளையாட்டாக கிளித்தட்டு இருப்பதனால் அதனை கிராம மட்டங்களில் இருந்து மீளுருவாக்கும் நோக்கோடு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அணிகளை உள்வாங்கி ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.
இன்றைய ஆரம்ப போட்டியில் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த 10 அணிகள் பங்குபற்றியுள்ளன.
பிரம்மாண்ட இறுதி போட்டி
அதில் இருந்து மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து அந்தந்த மாவட்டங்களில் குறித்த கிளித்தட்டு போட்டியானது ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் இடம்பெற்று ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மூன்று அணிகள் தெரிவு செய்யப்பட்டு போட்டிகள் இடம்பெற்று அதில் தெரிவு செய்யப்படும் அணிகள் இறுதி போட்டிக்கு செல்ல இருக்கின்றது.
தொடர்ச்சியாக போட்டிகள் இடம்பெற்று, இறுதி போட்டியானது கரடிபிலவு, பழம்பாசி, ஒட்டிசுட்டான் பகுதியில் கதிரவன் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 28, 29 ஆம் திகதி இரு நாட்களும் தமிழர் பாரம்பரிய நிகழ்வுகளுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று பிரம்மாண்டமாக இறுதி போட்டி இடம்பெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
