வவுனியாவில் தோல்வியடைந்த கடையடைப்பு : பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறப்பு
வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்பு நிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் கடையடைப்பு ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தொடரும் மக்களின் இயல்பு வாழ்க்கை
இந்தநிலையில், இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நகரத்தில் அநேக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன. பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றுவருவதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல உள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத் தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.
இதேவேளை, பழையபேருந்து நிலையம் மற்றும் பசார் வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபார நிலையங்களில் குறிப்பிட்ட அளவிலான வர்த்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன.
மேலும், புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம், நெடுங்கேணி, கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததுடன், சில வர்த்தக நிலையங்கள் கடையடைப்பிற்கு ஆதரவினை தெரிவிக்கும் வகையில் பூட்டியிருந்தன.





ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
