வடக்கு, கிழக்கை இணைத்து சுயாட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும்: விக்னேஸ்வரன்
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்து, சுயாட்சி நிர்வாக முறையை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அந்த நிர்வாக அலகுகிற்கு மத்திய அரசாங்கம் முழுமையான அதிகாரங்களை பரவலாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, இதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கூறி, விக்னேஸ்வரன், அரசியலமைப்புச் சட்டவாக்க நிபுணர்கள் குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து புதிய மாநிலத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவரது யோசனையில் கூறியுள்ளார்.