நல்லூரில் முதல் காளாஞ்சி பெறும் மாநகர சபை! நாசகார செயலுக்கு உடந்தையா
நல்லூர் ஆலய சூழலில் அமைக்கப்பட்டிருக்கும் அசைவ உணவகம் மிகப்பெரும் பேசுபொருளாக மாறி வருகின்றது.
இந்தநிலையில் மாநகரசபை ஓரு பொறுப்பு வாய்ந்த நிறுவனமாக தனது கடமைகளை ஆற்றவில்லை என்றும் ஓரு கண்துடைப்புக்காக உணவுப்பொருள் பொதி திகதி தொடர்பான வழக்கொன்றை பதிவு செய்து குறித்த விவகாரத்தை தனியச்செய்வதற்கான முயற்சியை செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இது தொடர்பில் மாநகரசபையை தொடர்பு கொண்டும் உரிய பதில் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பெருந்திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் அதன் முதன் மரியாதையாக காளாஞ்சியை பெற்றுக்கொள்ளும் மாநகரசபை ஒரு நாசகார செயலுக்கு ஒத்துழைப்பது ஒரு வேதனையான விடயமாக யாழ்ப்பாண மக்களால் நோக்கப்படுகிறது.
அதேவேளை குறித்த அனுமதியற்ற அசைவ உணவகத்தின் விளம்பரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிர்ந்திருக்கின்றமையும் ஒரு உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் பிண்ணனி தொடர்பாகவும் மேற்கொள்ளப்படும் விசேட நகர்வுகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |