மன்னார் காற்றாலை விவகாரம் : அநுரவின் அதிரடி அறிவிப்பு
மன்னாரில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
மன்னார் தீவிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வள திட்டத் திட்டத்தின்படி, காற்றாலை மின் உற்பத்தி அதிகமுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று காற்றாலை மின் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
குடியிருப்பாளர்களின் சம்மதத்தைப் பெறாமல்
இந்த திட்டங்களில், தம்பபவனி காற்றாலை மின் நிலையத்தின் செயல்பாட்டு நடவடிக்கைகள் 2021 இல் தொடங்கப்பட்டன.

மேலும் இரண்டு காற்றாலை திட்டங்கள் முறையே டிசம்பர் 2025 மற்றும் டிசம்பர் 2026 இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், திட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் எழுப்பிய விடயங்களைக் கருத்தில் கொண்டு, குடியிருப்பாளர்களின் சம்மதத்தைப் பெறாமல் அவற்றை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri