எண்ணெய் குதங்களை மீட்க இந்தியாவுடன் யுத்தம் செய்ய முடியாது: அமைச்சர் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் யுத்தம் செய்ய முடியாது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன், ஆனால் இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொள்கின்ற நிலையில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் மிகவும் தெளிவாக இந்த உடன்படிக்கை கூறப்பட்டுள்ளது. இணை அபிவிருத்தி திட்டமாக இது முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
