சட்டத்திற்கு புறம்பாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவில்லை
சட்டத்திற்கு புறம்பான வகையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய தண்டனை விதிக்கப்பட்ட அதுல திலகரட்ன என்பவருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தனிப்பட்ட ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 12ம் திகதி வெசாக் பௌர்ணமி தினமன்று சில கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
பொது மன்னிப்பு வழங்கப்படும் நிபந்தனைகளுக்கு புறம்பான வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் தகுதியற்ற கைதி ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டு வரும் தகவல்களில் உண்மையில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri