சட்டத்திற்கு புறம்பாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவில்லை
சட்டத்திற்கு புறம்பான வகையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய தண்டனை விதிக்கப்பட்ட அதுல திலகரட்ன என்பவருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தனிப்பட்ட ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 12ம் திகதி வெசாக் பௌர்ணமி தினமன்று சில கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
பொது மன்னிப்பு வழங்கப்படும் நிபந்தனைகளுக்கு புறம்பான வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் தகுதியற்ற கைதி ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டு வரும் தகவல்களில் உண்மையில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
