தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மக்கள் பதற்றமடைய தேவையில்லை – அரசாங்கம்
நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டு மக்கள் பதற்றமடையத் தேவையில்லை எனவும் அரசாங்கம் தெரிவித்துள்துள்ளது.
தேசிய பாதுகாப்பும் நாட்டின் இறையாண்மையும் பாதுகாக்கப்படும் வகையில், மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அரசு இவ்வேளையில் தீர்மானங்களை எடுத்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளை அரசு சரியான முறையில் கையாள முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையை முன்னிட்டு யாரும் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
புவியியல்–அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அரசு தீர்மானங்களை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள போர் நிலைமை தொடர்பாக தேவையான தரப்புகளுடன் தொடர்ந்து கலந்துரையாடி, அதனால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அரசு நெருக்கமாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு மிகுந்த பொறுப்புடன் இந்த நிலைமையை கையாண்டு வருவதாக பிரதி அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.